கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் திடீரென உயிரிழப்பு!

Published by
Surya

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செவிலியர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், பாண்டியூரில் வசித்து வருபவர் இளையராஜா. இவருக்கு கலைச்செல்வி என்ற 38 வயது மனைவி உள்ளது. கலைச்செல்வி, கடந்த 8 ஆண்டுகளாக ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த மாதம், 28 -ம் தேதி கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முதலில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த சில தினங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டிலே தனிமைப்படுத்திக்கொண்டு வந்தார். இந்தநிலையில், வீட்டில் தனிமையில் இருந்த கலைச்செல்வி, நேற்று உயிரிழந்தார். இது, அப்பகுதி மக்களிடம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Published by
Surya

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago