எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் – தீபா

Published by
Venu

எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று தீபா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா,  அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், போயஸ் தோட்ட வீட்டிற்கு இழப்பீட்டுத்தொகை நிர்ணய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்த்திருந்தார். அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்  அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கு இருந்தீர்கள் ..? என ஜெ.தீபாவுக்கு கேள்வி நீதிபதி எழுப்பினார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்தும் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தும், இந்த வழக்கு விசாரணையை 2 பேர் கொண்ட கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் இது குறித்து தீபா கூறுகையில், சொத்துக்கான போராட்டம் அல்ல. உரிமைக்கான போராட்டம்.எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான்.நான் இப்போது ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பியுள்ளேன்.நீதிமன்றத்தின் கேள்வி வருத்தத்தைஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

6 minutes ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

33 minutes ago

டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் : இளம் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின்.!

இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…

47 minutes ago

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

14 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

14 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

16 hours ago