ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீப காலமாக இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை பலரும் விளையாடி, லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர். அந்த வவிரக்தியில் பலரும் தற்கொலை செய்து வருகின்றனர். இதன்காரணமாக கடந்த ஜூலை மாதம் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்து ஊக்குவிக்கும் நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.
அதனைதொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் முத்துக்குமார் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று மதியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் நீலமேகம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அமர்வு, இதனை மனுவாக தாக்கல் செய்தபின், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…