#BREAKING : இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது – ஈபிஎஸ்..!

Published by
murugan

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்…? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவன் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு ரத்து என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. ஆனால் ரத்து செய்யவில்லை. இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கும் தயாராகவில்லை.

நீட் தேர்வு பயத்தால் சேலத்தை சேர்ந்த தனுஷ் தற்கொலை செய்துக்கொண்டதற்கு திமுக அரசுதான் காரணம். தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டார்கள். மாணவர் தனுஷ் மரணத்துக்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். திட்டமிட்டு மாணவர்களை ஏமாற்றுகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்து நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெற முடியும்…? என கேள்வி எழுப்பினார். இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே நீட்டுக்கு விலக்கு கேட்கிறது என கூறினார். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டப்பேரவையில் அரசு கொண்டு வரும் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும்  நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு. அதில் அங்கம் வகித்தது திமுக என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

3 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

5 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago