எதிர்க்கட்சி தலைவர் சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை கடந்த சில தினங்களாக உலுக்கிய சம்பவம் சுஜித் என்ற சிறுவனின் மரணம்.இந்த சிறுவனின் மரணம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே.. சிறுவனின் மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,சிறுவன் சுஜித்தை மீட்க இரவுபகல் பாராமல், மழை (ம) பண்டிகையை பொருட்படுத்தாமல் அனைத்து துறை அதிகாரிகளும் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் NDRF & SDRF, ONGC, NLC, NIT, அண்ணா பல்கலை ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது.மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியினை கண்காணித்து வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. சிறுவனை மீட்க இவ்வளவு முயற்சிகள் செய்தும் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசிவருவது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…