ஓபிஎஸ் மனைவி மறைவு;”பிரிவைத் தாங்கும் மனவலிமை ” -முன்னாள் அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல்..!

Published by
Edison

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

இதனையடுத்து,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை செலுத்தி,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும்,அதிமுக கட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து,முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.அதன்பின்னர்,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

இந்நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாககிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும்,இரங்கல் தெரிவித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“முன்னாள் முதல்வர்,அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் O. பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி. விஜயலஷ்மி அம்மையார் உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று திடீரென மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையத் தரவும், அன்னாரின் ஆன்மா நற்கதியடையவும் எல்லாம்வல்ல அன்னை சக்தியைப் பிரார்த்திக்கின்றேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

20 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago