O Panneerselvam [File Image]
ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததன் பெயரில் இரட்டை இலை சின்னம் என்பது அவர்களிடத்தில் உள்ளது. இதனை எதிர்த்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்பு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக , சின்னம் கொடி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என முறையிட்டு இருந்தனர். அதில், தேர்தல் ஆணையம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் தற்போது புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தேர்தலை சந்தித்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இரட்டை சின்னம் கொண்டு படுதோல்வி அடைவது தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வரும் நாடாளுமன்றத்தில் அதிமுக ஓபிஎஸ்) அணி என்ற பெயரில் பொது சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…