O Panneerselvam [File Image]
ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததன் பெயரில் இரட்டை இலை சின்னம் என்பது அவர்களிடத்தில் உள்ளது. இதனை எதிர்த்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
ஓபிஎஸ் தரப்பு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக , சின்னம் கொடி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என முறையிட்டு இருந்தனர். அதில், தேர்தல் ஆணையம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் தற்போது புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தேர்தலை சந்தித்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இரட்டை சின்னம் கொண்டு படுதோல்வி அடைவது தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வரும் நாடாளுமன்றத்தில் அதிமுக ஓபிஎஸ்) அணி என்ற பெயரில் பொது சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…