Muthuramalinga Thevar Statue - Dindigul Srinivasan [File Image]
அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை பரிசளித்து இருந்தார். இந்த கவசமானது மதுரை அண்ணா நகர் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும். ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தியின் போது அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கையெழுத்திட்டு கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்து பசும்பொன்னார் சிலைக்கு அணிவித்து பின்னர் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும்.
அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் தான் தங்க கவசத்தை எடுத்து வருவார். ஆனால் கடந்த ஆண்டு அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தேவர் தங்க கவசத்தை யார் எடுப்பது என்ற குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் அதிமுக சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். எனவே, கூறி தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கிறார். அவரிடமே தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் தனக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரினர். ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதனை மறுத்து இன்று வழக்கை ஒத்திவைத்து இருந்தார். இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், முறைப்படி பொதுக்குழு கூட்டி பொதுக்குழு உறுப்பினர்களால் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கிறார். எனவே தேவர் தங்க கவசத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்தாண்டு இதே பிரச்சனை எழுந்த போது ராமநாதபுரம் வருவாய் அலுவலரிடம் தேவர் தங்க கவசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…