சென்னையில் விஷ வாயு தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு.
சென்னை மாநகராட்சி, சீனிவாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் குபேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 15-ந்தேதி கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரிசெய்வதற்கு இறங்க முயன்றபோது, நாகராஜ் மற்றும் சயின்சா ஆகிய 2 நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போது, தான் மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், நாகராஜ் மற்றும் சயின்சா ஆகிய 2 நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்திற்கு காரணமான குபேந்திரன் என்பவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…