சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி உறுதியான நிலையில் முதல் முறையாக விஜயகாந்தை டிடிவி தினகரன் சந்தித்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராமல் குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினர். இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது.
பின்னர், தேமுதிக நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு அமமுகயுடன் கூட்டணி அமைத்தது. அமமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர் பட்டியலிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி உறுதியான நிலையில் முதல் முறையாக விஜயகாந்தை டிடிவி தினகரன் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம். தீய கட்சியான திமுக, துரோக கட்சியான அதிமுகவை வீழ்ந்துவதே எங்களது நோக்கம். தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமமுக வேட்பாளர்கள் வாபஸ் பெற்றனர். அதிமுக, திமுக கட்சிகள் தேர்தல் அறிக்கை மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறது என தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…