ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டியிருப்பது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் கிராமசபை கூட்டம் ரத்து தொடர்பாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த முடியும் என்பதே எங்களது நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், மாணவி தற்கொலை விவகாரத்தில், அவரது மரண வாக்குமூல வீடியோவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.
தஞ்சை அருகே பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் வரும் 25-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…