புறம்போக்கு நிலங்கள்:நில உரிமை மற்றும் இரயத்துவாரி என மாற்றம்;9 பேர் கொண்ட குழு அமைப்பு – அரசாணை வெளியீடு!

Published by
Edison

அரசு மற்றும் டான்சிட்கோ புறம்போக்கு நிலங்களை,நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என மாற்றம் செய்து முடிவெடுக்க அதிகாரமளிக்கப்பட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் (டான்சிட்கோ) தொழிற்பேட்டைகளில் உள்ள அரசு புறம்போக்கு என வகைப்பாடு கொண்ட நிலங்களை நில உரிமை மாற்றம் மற்றும் இரயத்துவாரி என வகைபாடு மாற்றம் செய்து முடிவெடுத்திட அதிகாரமளிக்கப்பட்ட குழு (Empowered Committee) அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,மெட்ரோ ரயில்வே திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் நிலம் கையகப்படுத்துதல், நில எடுப்பு,பயன்பாட்டுகளின் திசை திருப்புதல், திட்டத்தால் பாதிக்கப்பட்டவரின் மறு வாழ்வு. உள்துறை மற்றும் உள்நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களிடமிருந்து அனுமதி ஆகியவை குறித்து தீர்வு காணும் நோக்கில், திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு அமலாக்கு துறை, உயர்மட்ட குழு (High Power Committee) அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

மேலும்,தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ஆட்சேபனையுள்ள மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நிலவுரிமை மாற்றம் செய்வது குறித்து முடிவெடுத்திட செயலாக்க குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதே குழுவினர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு நிலவுரிமை மாற்றம் செய்வதிலும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் தக்க உத்தரவுகளை பெற்றுத் தரவும் 9பேர் கொண்ட இக்குழு செயல்படும்.குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:

  1. அரசு முதன்மைச் செயலாளர்,நிதித்துறை – உறுப்பினர்.
  2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,தொழில் துறை – உறுப்பினர்.
  3. அரசு முதன்மைச் செயலாளர்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை –  உறுப்பினர்.
  4. அரசு செயலாளர்,குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை – உறுப்பினர்.
  5. தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் – உறுப்பினர்.
  6. நில நிருவாக ஆணையர் – உறுப்பினர்.
  7. மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT) -உறுப்பினர்.
  8. மேலாண்மை இயக்குநர்,தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) –  உறுப்பினர்.
  9. மேலாண்மை இயக்குநர் ,தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) -உறுப்பினர்.

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago