மீண்டும் புழக்கத்திற்கு வரும் 1000 ரூபாய் நோட்டு.? ப.சிதம்பரம் கடும் சாடல்.!

Published by
மணிகண்டன்

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு புழக்கத்தில் விட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு நேற்று, மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் 30க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் அறிவுறுத்தல். வரும் செவ்வாய் முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திரும்ப கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தல்.

இந்த நடவடிக்கை குறித்து பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்ற்னர். இதுபற்றி முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான ப.சிதம்பரம் கூறுகையில், மத்திய அரசு , 2000 நோட்டை திரும்பப் பெற்று, அவற்றை மாற்ற செப்.30 வரை அவகாசம் அளித்துள்ள நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.

2000 நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு சரியான தொகையல்ல. இதை நாங்கள் 2016 நவம்பரிலேயே கூறிவிட்டோம். 500, 1000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க 2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. என்றும், பணமதிப்பிழப்புக்கு பிறகு புதிய 500 நோட்டை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது என்றும், மீண்டும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ரூ.1000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago