தமிழ்நாடு

#ElectionBreaking:சிபிஎம்-க்கு மதுரை துணை மேயர் பதவி -ஒதுக்கீடு செய்த திமுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை துணை மேயர் பதவியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் […]

#DMK 4 Min Read
Default Image

ஈஷாவில் கர்நாடக இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய ‘யக்‌ஷா’ திருவிழா..!

மஹாசிவராத்திரியையொட்டி கோவை ஈஷாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘யக்‌ஷா’ கலை திருவிழா நேற்று (மார்ச் 2) சிறப்பாக தொடங்கியது. முதல் நாளான நேற்று  சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் கர்நாடக இசை கலைஞர் திரு. அபிஷேக் ரகுராம் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடன் திரு. ஹெச். என். பாஸ்கர் அவர்கள் வயலினும், திரு.அனந்த கிருஷ்ணன் அவர்கள் மிருதங்கமும் இசைத்து பார்வையாளர்களை கவர்ந்தனர். சங்கீத நாடக அகாடமியின் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ […]

4 Min Read
Default Image

#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்!

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் தேதி சென்னை வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக அழைத்து சென்றது  காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மார்ச் 7 ஆம் […]

#ADMK 4 Min Read
Default Image

தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் சேர்க்கப்படாது – பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களின் திறனை மேம்படுத்தும்10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிப்பு. இந்தாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கூறுகையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல் 500 மதிப்பெண்களுக்கே கணக்கீடு செய்யப்படும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல. தொழிற்கல்வி பாடத்தில் பெறும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் மதிப்பெண்ணில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் […]

#TNGovt 4 Min Read
Default Image

#BREAKING: சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும்- அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ..!

சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிநடத்தினால் அதிமுக நல்ல நிலைக்கு வரும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.  கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிநடத்தினால் அதிமுக நல்ல நிலைக்கு வரும். எனக்கு கட்சி பொறுப்பு […]

#AIADMK 4 Min Read
Default Image

மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை – தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை..!

அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் […]

TN SCHOOL 4 Min Read
Default Image

#BREAKING:புதிய டாஸ்மாக் கடைகளை மக்களே தடுக்க சட்டத்திருத்தம் – தமிழக அரசு

புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு. தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு […]

# Liquor 2 Min Read
Default Image

#Breaking:மக்களே அலர்ட்…உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்;இன்று கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது. இந்நிலையில்,வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள […]

#Heavyrain 4 Min Read
Default Image

#Breaking:இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர்;நகராட்சி தலைவர் பதவிகள் ஒதுக்கீடு – திமுக அறிவிப்பு!

திருப்பூர்:மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து,மேயர்,துணை மேயர்,சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய […]

#CPI 4 Min Read
Default Image

பெட்ரோல்,டீசல் விலை – இன்றைய நிலவரம்!

சென்னை:119-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,119-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

#Petrol 3 Min Read
Default Image

#Alert:தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக,இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் […]

#Chennai Meteorological Department 5 Min Read
Default Image

இன்று முதல் கூடுதல் தளர்வுகள்;இதற்கான தடை நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “முதல்வர் அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும்,மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாகவும், இதுவரை நடைமுறையில் இருந்து […]

#CMMKStalin 5 Min Read
Default Image

இது பரப்புரை செய்வதற்கோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்க்கோ உகந்த நேரம் -அல்ல முதல்வர் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசும் தொடர்ந்து போராடி வருகின்ற சூழ்நிலையில் – தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்திய அரசு மாணவர்களை மீட்கும் முயற்சியில் […]

#CentralGovt 9 Min Read
Default Image

உக்ரைன் விவகாரம் : இது இந்திய அரசின் பொறுப்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மாணவர்கள் மீது மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அவர்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் 7-வது நாள் இன்றும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷ்யா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000 க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் […]

#CentralGovt 4 Min Read
Default Image

தமிழகத்தில் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு ..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 348 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 320 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இன்று 52,851  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,50,041 […]

coronavirustamilnadu 2 Min Read
Default Image

நகை கடன் தள்ளுபடி – வட்டி செலுத்த வற்புறுத்தினால் நடவடிக்கை – அமைச்சர் ஐ.பெரியசாமி

அரசின் அறிவுறுத்தலை மீறி வட்டி செலுத்த வற்புறுத்தினால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இறுதிப்பட்டியல் பயனாளிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் […]

#DMK 3 Min Read
Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்…! எப்போது தெரியுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 26, 27 தேதிகளில் துபாய்  பயணம் செல்கிறார்.   துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் மாபெரும் கண்காட்சி இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற மார்ச் 26, 27 தேதிகளில் துபாய்  பயணம் செல்கிறார்.   கண்காட்சியில் கைத்தறி, விவசாயம், சிறு தொழில் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கப்படும் வகையில் தமிழகம் சார்பில் அரங்கம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக […]

#DMK 2 Min Read
Default Image

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு – முதல்வர் அறிவிப்பு…!

கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாக இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் […]

CMStalin 4 Min Read
Default Image

#BREAKING: பொதுத்தேர்வு பாடவாரியாக அட்டவணை வெளியீடு..!

10,11 மற்றும் 12ம் வகுப்பு நடைபெறும் பொதுத்தேர்வு பாடவாரியாக எந்தந்த  தேதியில் நடைபெறும் என்ற குழு அட்டவணையை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, மே 5 […]

pubilc exam 3 Min Read
Default Image

#Breaking:அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்;மார்ச் 4 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும்;இதனால்,மார்ச் 4 ஆம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு. வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,தாழ்வு மண்டலம் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,நாளை நாகை,மயிலாடுதுறை,காரைக்கால் […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image