தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,பெண் செய்தியாளர்களை விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது பா.ஜ.க சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார். சென்னை பள்ளிக்கரணையை அடுத்த நன்மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் என்ற முறையில் தன்னுடைய கருத்து மட்டுமே கட்சியின் கருத்து என்று கூறினார். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
எஸ்.வி.சேகருக்கு , பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட நிலையில் எதிராக கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி உள்ளார். கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து தான் பார்வேடு செய்த கருத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை எஸ் வி சேகர் அனுப்பியுள்ளார். பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இது செய்தியாளர்களிடையே […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று 68–வது நாளாக போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் அருகேயும் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில்வர்புரம் பகுதியில் பாளையாபுரம், சுப்பிரமணியபுரம், சில்வர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் காற்றில் மாசு கலந்து இருப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாத […]
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் பயிலும் மாணவிகள் நான்கு பேரிடம் பாலியல் தொழிலுக்கு ஆசை காட்டியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் நிர்மலா தேவி மீது அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் நிர்மலா தேவியை திங்கள்கிழமை கைது […]
கோடை வெயில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொளுத்தி வருகிறது. பகல் முழுவதுமே தகிக்கும் வெயிலால் வீட்டை விட்டு வெளியில் வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சாலையில் கானல் நீர் தோன்றுவதைக் காணமுடிகிறது. திருத்தணியில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில் இன்று 101.66 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தொட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளை, நாளை மறுநாள் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் ஆட்சியர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால் தென் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்படும் என தகவல். இதையடுத்து, மீனவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் ஞாயிறு வரை கடல் சீற்றம் வர வாய்ப்புள்ளது. இதனால், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை பாதுகாத்துக் […]
குலசேகரம்:வசந்தகுமாரி இவர் திருவட்டாரை அடுத்துள்ள மாத்தூர் அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் .17.5 சென்ட் இடம் இவருக்கு சொந்தமாக இரணியல் பகுதியில் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2013ம் ஆண்டு நாகர்கோவில், வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த சசிகுமார் என்பருக்கு ரூ.54 லட்சம் தொகை பேசி விற்பனை செய்துள்ளாராம்.அப்போது 29 லட்சம் பணத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ரூ.25 லட்சத்தை கொடுக்காமல் சசிகுமார் தாமதம் செய்துள்ளார். இந்தநிலையில் பாக்கி பணத்தை வசந்தகுமாரி நேற்று முன்தினம் சசிகுமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் […]
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். நோயினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது, ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் அரசு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி தூத்துக்குடி அரசு […]
சென்னை வானிலை ஆய்வு மையம் ,தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கிறது. இந்த வாரத்துக்கான முகாம் இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா மேலத்தட்டப்பாறையிலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்திலும், திருச்செந்தூர் தாலுகா தென்திருப்பேரையிலும், சாத்தான்குளம் தாலுகா பிடானேரியிலும், கோவில்பட்டி தாலுகா இடைசெவல் பகுதி–2 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா புதூர் குளக்கட்டாக்குறிச்சியிலும், எட்டயபுரம் தாலுகா ஆத்திக்கிணறு மற்றும் தி.சண்முகபுரம் […]
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார். இதனிடையே நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன.இந்த நிலையில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை பொதுமக்கள் தாங்களாகவே தெரிந்து கொள்ள உணவுப் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது. https:/safewataerfssai.gov.in/cleanwater/home என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி குடிநீர் பாட்டில், பாக்கெட், கேனில் உள்ள ஐ.எஸ்.ஐ. எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் திஷிஷிகிமி எண்ணை பயன்படுத்தி அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட குடிநீரின் 6 மாதம் மற்றும் ஒரு வருட பரிசோதனை அறிக்கை, ஐ.எஸ்.ஐ. தரம், உணவுப் […]
நிர்மலா தேவியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு சாத்தூர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சாத்தூர் நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் […]
சாத்தூர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவியை ஆஜர்படுத்தியது போலீஸ. சாத்தூர் நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்தனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி […]
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவும், எஸ்.வி. சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவரிடம், ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகர் ஆகியோர் மீது புகார் அளித்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ஹெச்.ராஜா பெண்களையும், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி பேசியிருப்பதற்கும் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். முதலமைச்சர் பற்றி தவறாக பேசிய ஹெச். ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடரும் […]
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிப்பதை ஹெச்.ராஜா உள்ளிட்டோர் தவிர்க்க வேண்டும் என, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் கூறினார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், எஸ்.வி.சேகர் பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் ட்விட்டர் பதிவிட்டது குறித்து கேட்டபோது, அதுகுறித்து தெரியாது என்பதால் கருத்து சொல்ல விரும்பவில்லை என கூறினார். ஒரு பெண் ஆளுமையின் கீழ் இருந்த தாங்கள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கக் கூடாதா என செய்தியாளர் கேட்டுமுடிப்பதற்குள் சந்திப்பை […]
நீதிமன்றத்தில், மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியை 7 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி மீது எழுந்துள்ள புகார் தொடர்பாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். சிபிசிஐடி போலீசார் அளித்த மனுவை ஏற்று இந்த வழக்கு, அருப்புக்கோட்டை […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்திற்குரிய நிதியை முறையாக அளிக்க வேண்டும் என்று மத்திய நிதிக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பாக நிதிக்குழுத் தலைவர் என்,கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2011ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார் .மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் அக்கடிதத்தில் விளக்கியுள்ளார். நிதிக்குழு மூலம் தொடர்ந்து தமிழகம் தண்டிக்கப்படுவதாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர், […]
அருப்புக்கோட்டையில் சந்தானம் குழு, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, இன்று விசாரணை நடத்துகிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக உயர்பொறுப்புகளில் உள்ளவர்களுக்காக மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து விசாரிக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் என்பவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். சந்தானத்திற்கு உதவியாக, பேராசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அன்னை தெரசா கல்லூரி […]
பாமக நிறுவனர் ராமதாஸ், பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குனருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலிடத்திலிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் ஜெயந்த் முரளிக்கு பதில், 2015-ஆம் ஆண்டில் […]