50 ஆண்டுகள் நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் கடந்த 1967ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகள் இயங்கிவந்த இந்த தொழிற்சாலை வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தால் நாளடைவில் நலிந்து வர தொடங்கியது. கடந்த 2013ஆம் ஆண்டு முதல் உற்பத்தியும் நின்றுபோன நிலையில், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு […]
அமலாக்கத்துறை,வங்கிகளிடம் 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த கனிஷ்க் தங்க நகை தயாரிப்பு நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருக்கிறது. தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கனிஷ்க் நிறுவனம், எஸ்பிஐ உள்பட 14 வங்கிகளிடம் 2009ல் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இருப்பில் இருந்ததை காட்டிலும், சுமார் 3000 கிலோ தங்கம் அதிகமாக இருப்பதாக போலியான நிதி […]
இனி வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்பட மாட்டேன் என்று திவாகரன் தெரிவித்துள்ளார். திவாகரனின் மகன் ஜெயானந்த் நேற்று முன்தினம் தினகரனுக்கு எதிரான ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் “மாபெரும் தவறுகளை பொறுத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சீரமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெயானந்த் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், “என்னால் முடிந்ததை போஸ் […]
நாகர்கோவில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அனுமதியின்றி சாலையில் சிலர் இறைச்சி கடைகள் நடத்தி வருவதாகவும், அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் மாடு மற்றும் பன்றி வெட்டப்பட்டு இறைச்சி விற்கப்படுவதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக சாலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகளை அகற்றவும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சியை விற்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நகர்நல அலுவலர் கின்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதேவன் […]
நான் யாருக்கும், எதற்கும் அஞ்சமாட்டேன் சமூக வலைத்தளங்களில் அமமுகவை பற்றி தவறான பதிவுகளை போட்டால் கடும் நடவடிக்கை என்று ஆர் கே நகர் சட்ட மன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார். திவாகரனின் மகன் ஜெயானந்த் நேற்று முன்தினம் தினகரனுக்கு எதிரான ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் “மாபெரும் தவறுகளை பொறுத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சீரமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர். அதற்கு […]
நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக தங்கபாண்டி என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பேராசிரியர் நிர்மலாதான் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசியது என்பது ஆய்வில் நிரூபணம் ஆனது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் […]
நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் முருகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி காவல்துறையினர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. […]
பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பல்கலை. நிர்வாக அலுவலர் முத்தையா மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காமராஜர் பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த […]
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை […]
அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் சுயநலம் மற்றும் அரசியல் லாபத்திற்காக சட்டம் சரிவர இயக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.அதில் அவர் கூறியதாவது:- சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. […]
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ,குட்கா முறைகேடு வழக்கின் விசாரணை அதிகாரிகளை மாற்றியும், கோப்புகளை மறைத்தும், அந்த வழக்கிற்கு மூடு விழா நடத்த, ஆளும் அதிமுக அரசு முயற்சிப்பதாக, குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நோக்கத்தில், குட்கா வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி மஞ்சுநாதாவை, ஓராண்டு காலத்திற்குள்ளாக மாறுதல் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என கூறியிருக்கிறார். சுதந்திரமான விசாரணைக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதை அடுத்து, விஜிலென்ஸ் […]
கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பானு என்பவரது மகன் அப்துல்லா (வயது 17), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் சூர்யன் (17). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் தமிழக-கேரள எல்லையான வாளையாருக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள அணையில் 2 பேரும் குளித்தனர். எதிர்பாராதவிதமாக அவர் கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில், நீரில் […]
25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் சுயநலம் மற்றும் அரசியல் லாபத்திற்காக சட்டம் சரிவர இயக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாதிரி கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.அதில் அவர் கூறியதாவது:- சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கிராமங்களின் பலம். இந்த சட்டம் இயற்றப்பட்டு இதே தேதியில் 25 ஆண்டுகள் முன்னர் இந்த சட்டம் இயற்றப்பட்டது. […]
நிபந்தனை ஜாமீன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி, பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதை கண்டித்து நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை […]
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை, இடைக்கட்டான் கரையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுஜித் (வயது20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வந்தார். சரியான வேலை கிடைக்காததால் தற்போது கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் குலசேகரம் நோக்கி புறப்பட்டார். மங்கலம் பகுதியில் சென்ற போது, எதிரே குலசேகரத்தில் இருந்து பொன்மனை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் […]
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் சக்திவேல்(வயது 16). பிளஸ்-2 மாணவர். இவர் கடந்த 19-ந் தேதி இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வனவாசி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் […]
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் […]
சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 3 கார்களை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்த கார்களை மீட்க மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். அப்போது அந்த நபர், கோவை குனியமுத்தூர் சாரமேட்டை சேர்ந்த பழைய கார்களை விற்பனை செய்யும் வியாபாரியான ரபீக் (வயது 50) என்பவரிடம் உங்கள் கார்கள் உள்ளன. நீங்கள் ரூ.4 லட்சம் […]
கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார் .மேலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் குரங்கனி வனத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, அங்கு ட்ரெக்கிங் சென்ற 22 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம், சூழல், குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை அரசு நியமித்தது. அவர் குரங்கனி சென்று வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்களிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார். விசாரணை விவரங்களை அறிக்கையாக தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று […]