கோவை கார் வெடித்த விபத்து விசாரணையில் என்ஐஏ விசாரணை அதிகாரியாக தமிழக காவல் துறையில் இருந்து காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் . கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது. இதனை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, முபினுக்கு உதவியதாக […]
கோவை சம்பவத்தில் முதல்வர் அவர்கள் மௌனம் கலைத்து பேச வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் பேட்டி. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் அரசின் மெத்தன போக்கினால் தான் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கோவை சம்பவம் குறித்து பேசியவர் கோவை சம்பவத்தில் முதல்வர் அவர்கள் மௌனம் கலைத்து பேச வேண்டும். […]
முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை எனவும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை. – பாஜக முழு அடைப்புக்கு தடை கேட்ட வழக்கில் அண்ணாமலை தரப்பு விளக்கம். கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார். இதற்கு தடை கேட்டு , சென்னை […]
அய்.அய்.டி. படித்த ஆம் ஆத்மி தலைவர்; முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா? என ஆசிரியர் கீ.வீரமணி கேள்வி. நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லாவற்றிற்கும் இறைவனின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும், என புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் உருவங்களை அச்சடித்தால் பொருளாதாரத்தை சீரமைக்க பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி இதுகுறித்து தனது ட்விட்டர் […]
குரூப் II, II A தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு-II/IIA (தொகுதி-II/IIA) இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. […]
பாஜக அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டமானது கோவை வியாபாரிகளையும் ,கோவை மக்களையும் வெகுவாக பாதிக்கும். – தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் கருத்து. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கார் வெடிப்பு தொடர்பாகவும், அதற்கான ஆளும் திமுக அரசு நடவடிக்கை குறித்து, திமுக அரசை கண்டித்தும் பாஜக சார்பில் வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த் போராட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க கோவை மண்டல தலைவர் […]
பாஜக அறிவித்துள்ள பந்த் போராட்டத்திற்கு தடை கேட்ட வழக்கு அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக அறிவித்தது. இந்த பந்திற்கு தடை கேட்டு , சென்னை உயர்நீதிமன்றத்தில் வி.ஆர்.வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாஜகவின் பந்த்-ஐ சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரியும், அதற்கு தடை கேட்டும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த வழக்கை […]
கடலூரில் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். இன்று கடலூர் மாநகர திமுக சார்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த போராட்டத்தில் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களை பேச சொல்லுங்கள் […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பரோஸ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருப்பவர்களை சந்தித்து பேசியுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது. இதனை […]
நாம் இப்போது நிற்கும் இந்த தமிழ்நாடு, யோகிகளாலும் சித்தர்களாலும் உருவாக்கப்பட்டது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு காவல்துறை இந்தியாவிலேயே மிகச்சிறந்த அமைப்பு. தீவிரவாதிகள் நமது எதிரிகள். நண்பர்கள் அல்ல; சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் போலீசார் சிறப்பாக பணியாற்றி வெடி பொருட்களை கைப்பற்றியதோடு, சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்தனர். கோவை பயங்கரவாத தாக்குதலில் அவர்கள் […]
பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. அனைத்து பள்ளிகளும் உயர்நீதிமன்ற உத்தரவின் படி, விதிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அனைத்து […]
தமிழகத்தில் நாளை முதல் பருவமழை தொடங்க உள்ள நிலையில், இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் நாளை முதல் பருவமழை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் […]
பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே அக்டோபர் 31-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என வானதி அறிக்கை. கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சமத்துவம் தொடர்பாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வானதி சீனிவாசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டலுக்கு பா.ஜ.க. அஞ்சாது. பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு […]
கிராமசபை போல நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கிராமசபை கூட்டங்கள் தமிழகத்தில் நடைபெறுவது போல நகர சபை கூட்டங்கள், மாநகர சபை கூட்டங்கள் மக்களால் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில், வரும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் நாளில் தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் […]
தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? என அண்ணாமலை கேள்வி. திமுக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நேற்று பாஜக சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க […]
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட 5 நபர்கள் வீடுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உயிரிழந்த ஜமேஷ் முபின் உடன் தொடர்புடையதாக முதற்கட்டமாக முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என 5 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு, அப்சர் கான் என்பவர் 6வது […]
மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது என கே.எஸ்.அழகிரி ட்வீட். பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் பேட்டி எடுக்க சென்ற போது, அவர்களை பார்த்து, என்ன மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி எல்லாரும் சுத்தி, சுத்தி வாறீங்க. ஊருல நாயி, பேயி சாராயம் விற்கிறவன் சொல்றதெல்லாம் கேட்பீங்க சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். அன்னமலை இந்த பேச்சு தற்போது பேசும் பொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் […]
டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டலும், புதிய வழக்கு பதிய வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், குற்றச்சாட்டுகளில் இருந்து முழுதாக எஸ்.பி.வேலுமணியை விடுவித்து விட முடியாது. – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கருத்து. கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு அரசு சார்பில் டெண்டர் கோரப்படத்தில், முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்பி.வேலுமணி தரப்பில் வழக்கு தொடர்பாட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை விசாரித்த […]
கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, அங்கேயே சிகிச்சை பெற்று வந்த, மகேந்திரன்-தீபா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில், மகேந்திரன் என்பவரும், தீபா என்ற பெண்ணும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று திருமணம் நடைபெற்றது. மகேந்திரன்-தீபா தம்பதியருக்கு மனநல காப்பகத்திலேயே வார்டு மேற்பார்வையாளர் பணி […]
ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதை யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.’ என கனிமொழி எம்பி குஷ்பூ டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். நேற்று திமுக பிரமுகர் ஒருவர் சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் மேடையில் பேசுகையில், பாஜக பெண் பிரமுகர்களான குஷ்பூ, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோரை பற்றி விமர்சித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. […]