ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதில் முன்னுரிமை தரவேண்டும் என்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்தியவர்களுக்கு அடுத்த கட்டமாக முன்னுரிமை தந்து பணத்தை தரவேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.மேலும், கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால நிவாரணம் அளித்தும், […]
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். இதுவே திராவிட மாடல் அரசின் செயல்பாடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டை செழிக்க செய்யக்கூடிய வல்லுநர்கள் மாணவர்கள்தான். தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள். கல்விக் கண்ணை திறப்பதை பெரும் பணியாக எண்ணியே திராவிடம் மாடல் அரசு செயல் பட்டு வருகிறது. அனைவருக்கும் […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், ஜித்தன்ஜாய், ஜம் சீர் அலி ஆகியோர் ஆஜரான நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை உதகை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
‘மானவர் மனசு’ திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க, 800 மருத்துவர்களை நியமிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இத்திட்டம் விரைவில் முதலமைச்சரால் துவக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். “மாநிலம் முழுவதும் உள்ள 413 கல்வித் தொகுதிகளில் தலா இருவர் வீதம் 800 டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். படிப்பு, தொழில் மற்றும் நடத்தை மாற்றங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும்,” அமைச்சர் கூறினார். இளமைப் […]
முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கம் சான்றிதழை வழங்கி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். 70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கல்விக்கு ஊக்கத்தொகை அரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழா இன்று சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி பயில்வோரின் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கையில் வளம் பல […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,69-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 29) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் 69 மாணவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கவுள்ளார். 70 ஆண்டுகளுக்கு […]
பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார். பிரதமர் அவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ள நிலையில், 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில், தமிழக […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.304 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் […]
பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு. பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கல்குவாரியில் இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குவாரி பணியில் பாறைகளை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் சுப்பிரமணி, வினோத் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்து ஏற்பட்ட கல்குவாரி அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து அதிமுக எம்.பி., ரவீந்திரநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு […]
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,803 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,712 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 368 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் […]
தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி பேச்சு. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றி வருகிறார். பிரதமர் அவர்கள், வணக்கம் எனக் கூறி தமிழில் கூறி, விருந்தோம்பி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார். அப்போது பேசிய அவர், செஸ் […]
தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும் என முதல்வர் பேச்சு. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில், இன்றைய நாள் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாளாக அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மற்றும் முதல்வர் பாரம்பரிய உடையுடன் மேடையில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர […]
செஸ் ஒலிம்பியாட் விழாவில் என்சாய் எஞ்சாமி பாடலுக்கு நடனம். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடகர்கள் தீ […]
பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்களை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்று அரங்கத்தினுள் அழைத்து வந்தனர். 44வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி இன்று ப்ரமாண்டமாக தொடங்கியுள்ளது. இதன் துவக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உச்ச பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கலந்து கொள்ள அரங்கத்தில் நுழைந்தனர். அவர்களை அரசுப்பள்ளி […]
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை மிக அற்புதமாக கூறி வருகின்றார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா இன்று சென்னையில் கோலாலமாக தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு நிகழ்வு, உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை […]