தமிழ்நாடு

#BREAKING : முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வழங்கிய விஸ்வநாதன் ஆனந்த்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மற்றும் முதல்வர் பாரம்பரிய உடையுடன் மேடையில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர […]

- 2 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட் விழாவில் குக்கூ குக்கூ பாடல்..!

செஸ் ஒலிம்பியாட் விழாவில் என்சாய் எஞ்சாமி பாடலுக்கு நடனம்.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடகர்கள் தீ […]

- 2 Min Read
Default Image

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மிக பெரிய பெருமை… சர்வதேச ஒலிம்பியாட்டில் தமிழக அரசு செய்த செயல்.!

பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்களை அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் வரவேற்று அரங்கத்தினுள் அழைத்து வந்தனர்.  44வது சர்வதேச ஒலிம்பியாட்  செஸ் போட்டி இன்று ப்ரமாண்டமாக தொடங்கியுள்ளது. இதன் துவக்க விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என உச்ச பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கலந்து கொள்ள அரங்கத்தில் நுழைந்தனர். அவர்களை அரசுப்பள்ளி […]

chess olympiad 2022 2 Min Read
Default Image

உலகநாயகன் குரல் பதிவில் தமிழர்களின் பண்டையகால வரலாறு… மிரள வைத்த தமிழக அரசு.! 

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை மிக அற்புதமாக கூறி வருகின்றார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா இன்று சென்னையில் கோலாலமாக தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு நிகழ்வு, உலகநாயகன் கமல்ஹாசன் குரல் பதிவில், தமிழர்களின் பண்டைய கால வரலாற்றை […]

#KamalHaasan 3 Min Read
Default Image

பிரதமருக்கு நினைவு பரிசை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு, மாமல்லபுரம் சிற்பத்தினாலான நினைவு பரிசினை வழங்கினார்.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாரம்பரிய கலை நிகழ்வுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் விழா […]

- 2 Min Read
Default Image

#BREAKING : தமிழர் பாரம்பரிய உடையில் விழா அரங்கிற்குள் வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் அரங்கிற்குள் வந்தடைந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாரம்பரிய கலை நிகழ்வுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் […]

#MKStalin 3 Min Read
Default Image

ஒரே நேரத்தில் இரண்டு..கண்ணை கட்டிக்கொண்டு பியானோ வாசித்து அசத்திய லிடியன் நாதஸ்வரம்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ஒரே நேரத்தில் இரு பியானோவில் தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார். இவ்விழாவில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சர்வதேச நாடுகளின் கொடி அணிவகுப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டது. […]

#Chennai 4 Min Read
Default Image

#BREAKING: சென்னை வந்தார் பிரதமர் மோடி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி.  சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை  நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு […]

#Chennai 3 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட் : பட்டு வேஷ்டி சட்டையுடன் துவக்க விழாவுக்கு வந்திறங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக பாரம்பரிய உடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.  44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் துவக்க விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். அவரை விழா குழுவினர் வரவேற்று உள்ளனர். மேடையில் தமிழக பாரம்பரிய உடையில் அமர்ந்துள்ளார் தமிழக முதல்வர். அடுத்ததாக பிரதமர் மோடி […]

- 2 Min Read
Default Image

வெடி விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர். விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தென்காசி மாவட்டம், வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த […]

#CMMKStalin 4 Min Read
Default Image

பிரதமர் மோடி வருகை… தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் முன்னெச்சரிக்கை கைது.!

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் என்பவரை காவல்துறையினர் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். இன்று சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு செஸ் விளையாட்டு கலைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதில், முக்கியமாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் என்பவரை காவல்துறையினர் முன்னெச்செரிக்கை […]

44thChessOlympiad 2 Min Read
Default Image

அண்ணாமலை உள்பட பாஜகவினர் 1,800 பேர் மீது வழக்குப்பதிவு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது வழக்குப்பதிவு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வாள்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட பாஜக சார்பில் நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகே மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடந்தது. சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடுதல், பொது சாலையை மறித்து இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

#Annamalai 2 Min Read
Default Image

செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் – தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்ற கிளை..!

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படம், பெயரை சேர்க்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு ஒத்திவைப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை […]

- 5 Min Read
Default Image

பா.ஜ.க.வினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா ? – கே.எஸ்.அழகிரி

ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பா.ஜ.க.வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என கே.எஸ்.அழகிரி ட்வீட்.  செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில், பா.ஜ.க.வினர் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை ? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சென்னை மால்லபுரத்தில் நடைபெறுவதாக இருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடியின் வருகை […]

#KSAlagiri 4 Min Read
Default Image

இன்று 19 மாவட்டங்களில் கனமழை.. நாளை 14 மாவட்டங்களில்.. – வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய […]

#Chennai 3 Min Read
Default Image

அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!

அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், கேவியட் மனு தாக்கல். அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கட்சி சார்பில் புதிதாய் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக தலைமை நிலை செயலகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடிபழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

#AIADMK 3 Min Read
Default Image

#BREAKING: தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி – உயர்கல்வித்துறை அறிவிப்பு

தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு. தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணியாற்றி வரும் 4,681 பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு செய்யப்படுகிறது என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கல்வியியல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,681 தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு […]

#MinisterPonmudi 2 Min Read
Default Image

#BREAKING: நீதிமன்ற அவமதிப்பு – அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி,  அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உதவி ஆணையர், இணை ஆணையர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அபராத தொகையை 2 வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த பிறப்பித்த உத்தரவை அமல்படுத்ததால் […]

CharityCommissioner 2 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட்டில் பிரதமர் மோடி புகைப்படம் இல்லை.! உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.!

செஸ் ஒலிம்பியாட் விளம்பர புகைப்படங்களில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை என மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது.  செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ள்ளது. இதில், கலந்துகொள்ள போட்டியாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளனர். இந்த போட்டி தமிழகத்தில் நடைபெறுவதால், செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரப்படுத்தபட்டது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. அதனால், பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் […]

- 3 Min Read
Default Image

#BREAKING: சென்னையில் குரங்கு அம்மை பரிசோதனை மையம்.. அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை – அமைச்சர்

வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் குரங்கு அம்மை பரிசோதனை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை கிண்டியில் உள்ள குரங்கு அம்மை பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை கண்டறியப்படவில்லை. தமிழகம் வந்த சிலருக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டன. புனேவுக்கு மாதிரிகளை பரிசோதித்ததில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் […]

- 4 Min Read
Default Image