வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் குரங்கு அம்மை பரிசோதனை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை கிண்டியில் உள்ள குரங்கு அம்மை பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை கண்டறியப்படவில்லை. தமிழகம் வந்த சிலருக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டன. புனேவுக்கு மாதிரிகளை பரிசோதித்ததில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் […]
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா கலைநிகழ்வில் கலந்துகொள்ளவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,68-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 28) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகும் செலவினங்களில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று […]
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கவுள்ள நிலையில், மறைந்த கலைஞர் கருணாநிதியின் நினைவிடம், செஸ் தீமில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் […]
மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளையை நெரிப்பதுபோல, அவர்களது பேச்சுரிமை,கருத்துரிமையை பறிப்பது எவ்வகையிலும் ஜனநாயகத்திற்குகந்ததல்ல கீ.வீரமணி ட்வீட். மாநிலங்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய நிலையில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து ஆசிரியர் கீ.வீரமணி, ‘நமது இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பீடிகை இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்றே கூறப்பட்டுள்ளநிலையில், மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற […]
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று கோலாகலமாக தொடங்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். […]
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,846 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,803 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 396 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் […]
ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 4 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தி உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக […]
ஓட்டுநர் இன்றி இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.946.92 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னையில் ஓட்டுநரே இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் ரூ.946.92 கோடிக்கு கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.946.92 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான மொத்த கால அவகாசம் 40 மாதங்கள் […]
ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு டாக்.ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கு நிறைவும் – செவிக்கு அறிவும் ஊட்டும் கனவுத்திட்டம், காலை உணவுத் திட்டம்! திராவிடக் […]
காலை உணவு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1.45 லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில்! காலை உணவுடன் கல்வி புகட்டும் கனவுத்திட்டம் அறிவிப்பு. பசி நீக்கி கல்வி தருதல் இடைநிற்றலைத் தடுக்க இனிய வழி. […]
அதிமுக பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக சசிகலா மேல்முறையீடு. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற உத்தரவை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 2வது வாரம் விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கிமீ நீள கடற்கரையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியில் திட்டம். சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ நீள கடற்பகுதியை புத்தாக்கம் செய்ய ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் கடற்கரையின் அடிப்படை வசதி மேம்படுத்துதல், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த வசதி செய்தல் ஆகியவை அடங்கும். கடற்கரையோர சுற்றுச்சூழலை பாதுகாத்தல், நடைபாதைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் […]
கபடி போட்டியின்போது உயிரிழந்த வீரர் சஞ்சய் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் கடந்த 24 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற […]
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவே இல்லை என அண்ணாமலை பேச்சு. கரூரில் பாஜக தலைவர் அண்ணமலை தலைமையில் மின் கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக தான் ஆட்சி செய்யும். மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொன்ன கடிதம் எங்கே என்று கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை அது குறித்த பதில் இல்லை. […]
காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசு பள்ளிகளுக்கு வரும் ஏழைக் குடும்ப மாணவர்களின் வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது ஆகும்! அரசு […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேர் சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டது. 3 […]
செஸ் போட்டியில், விளம்பரத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது என ஜெயக்குமார் விமர்சனம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு வரி உயர்வால் மக்களை வாட்டி வதைக்கு விடியாத அரசாக தான் உள்ளது. இந்த ஆட்சியை பொறுத்தவரையில் நாட்டில் என்ன நடக்கிறது என்ற தெரியாத வகையில், ஒரு சுயநினைவு இழந்த ஆட்சியை […]