காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசு பள்ளிகளுக்கு வரும் ஏழைக் குடும்ப மாணவர்களின் வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது ஆகும்! அரசு […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக மேலும் 2 பேர் சிபிசிஐடி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டது. 3 […]
செஸ் போட்டியில், விளம்பரத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது என ஜெயக்குமார் விமர்சனம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு வரி உயர்வால் மக்களை வாட்டி வதைக்கு விடியாத அரசாக தான் உள்ளது. இந்த ஆட்சியை பொறுத்தவரையில் நாட்டில் என்ன நடக்கிறது என்ற தெரியாத வகையில், ஒரு சுயநினைவு இழந்த ஆட்சியை […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கைதான் இருவருக்கு வழங்கப்பட ஜாமீன் நிபந்தனையில் மாற்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் 2 பேருக்கு வழங்கப்பட்ட்ட ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோர் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று ஆணியிடப்பட்டுள்ளது. உதகையில் தங்கியிருந்து திங்கட்கிழமைதோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி நீதிமன்ற அனுமதி […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியைகளை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
திமுக அரசு ஈவு இரக்கமில்லாமல் மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் ஈபிஎஸ் குற்றச்சாட்டி உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர், இன்று ஆளும் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். எனவே தான் இந்த போராட்டம் […]
முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. சமீபத்தில் திமுக தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என […]
திமுகவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர், இன்று ஆளும் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வு தொடர்பாக, ஈவு இறக்கம் இல்லமால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என கண்டனங்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதன் பின்னர், அதிமுககாரர்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர். அப்போது மேடையில் இருந்த இ.பி.எஸ், லேசாக கண் சொருகி, அருகில் […]
மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,67-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 27) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மின்கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்துள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மின்கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் […]
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் படிப்பு தானாக வந்துவிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை. பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை சென்னை அசோக் நகர் பள்ளியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மருத்துவ குழுவினர் அடங்கிய வாகனங்களையும் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மன ரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும் என்றும் […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 6 பேர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வருகை. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபம் […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை. கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மற்றும் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர். 12-ஆம் வகுப்பு மாணவியின் மரணம் பற்றி பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களிடம் ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ஆம் […]
ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட். இன்று ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராமேஸ்வரத்தில் பிறந்த ராக்கெட் விஞ்ஞானி, ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், சாமானிய குடும்பத்தில் பிறந்த சாம்ராட். மதம் மொழி சாதி பிரிவு பிறப்பிடம் என வரம்புகளுக்குள் அடங்காத அறிவுச் சூரியன்! இறைவனை பகுத்தாய்ந்த வள்ளலார் இறைவனோடு கரைந்து விட்டார். மேகவெளியை பகுத்தாய்ந்த […]
பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்திகளை தொடக்கி வைத்தார் முதலமைச்சர். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படும் மனநல மற்றும் உடல்நல சார்ந்தபிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை சென்னை அசோக் நகர் மகளிர் பள்ளியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய வாகனங்களை துவக்கி வைத்தார் முதல்வர். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை […]
சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்குகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு […]
நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாமல்லபுரத்துக்கு வந்தடைந்தது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா […]
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,903 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,846 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 409 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் […]