அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பழ.கருப்பையா திமுகவிலிருந்தும் விலகல்

Published by
Venu
  • கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தவர் பழ. கருப்பையா.
  • தற்போது திமுகவில் இருந்து பழ. கருப்பையா விலகியுள்ளார்.

அரசியல், சினிமா,எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் பழ. கருப்பையா.இவர் முன்னாள் சட்ட மன்ற உ றுப்பினர் ஆவார். அதிமுக  சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான துறைமுகம் தொகுதியில் கடந்த  2011-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் . இவர் அங்காடித் தெரு ,சர்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பட்டினத்தார் ஒரு பார்வை, அரசியல் சதிராட்டங்கள், காலம் கிழித்த கோடுகள், கண்ணதாசன், காலத்தின் வெளிப்பாடு, எல்லைகள் நீத்த  ராம கதை, கருணாநிதி என்ன கடவுளா? என்ற நாவல்களை எழுதியவர் ஆவார்.

கடந்த 2016 -ஆம் ஆண்டு கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுகவின் அப்போதைய பொதுச்செயலாளர்  ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதனால் தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்பு  அதிமுகவை விமர்சனம் செய்யத் தொடங்கினார்.பின்னர் அதிமுகவில் இருந்து கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இந்தநிலையில் இன்று திமுகவில் இருந்து விலகுவதாக பழ. கருப்பையா அறிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago