வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உத்தரவை மீறினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடினால் அதீத நடவடிக்கையாக பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும் வீட்டில் இருக்காமல் வெளியே நடமாடினால் காவல்துறை மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சிரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தனிப்படுத்தப்பட்ட பயணிகள் அரசின் உத்தரவை மீறி வெளியே சுற்றினால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில், அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் விபரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…