வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன்பு பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பாமக தொண்டர்களும் கட்சி மற்றும் நிர்வாகிகளும் சென்னை நோக்கி வந்தனர்.
அவர்களை சென்னை எல்லையான பெருங்களத்தூர் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சில முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே சென்னைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னைக்குள் செல்ல அனுமதி கோரி பாமக கட்சி தொண்டர்கள் பெருங்களத்தூர்- ஜிஎஸ்டி நெடுச்சாலையின் இரு புறமும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ஒரு கும்பல், அருகில் இருந்த ரயில் பாதைகளை நோக்கி ஓடி அந்த வழியாக வந்த ரயில் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாமாகவினர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…