மக்களே உஷாரா இருங்க! 76 ரூபாய் பிரியாணிக்கு ஆசைப்பட்டு, ரூ.40,000 – ஐ இழந்த பெண்!

Published by
லீனா

சென்னை சவுகார் பேட்டை நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ப்ரியா அகர்வால்(21) ஒரு கல்லூரி மாணவி ஆவார். இவர் நேற்று காலை மிகுந்த பசியினால், பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட, தனது செல்போனில் பிரியாணி கடையை தேடியுள்ளார். அவர் தேடலில் கிடைத்த, வடபழனியில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி வாங்க முடிவு செய்து, உபர் ஈட்ஸ் என்ற இணையதளம் மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.

இதற்காக அவர், ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்துள்ளார். ஆனால், பணப்பரிமாற்றம் செய்து சிறிது நேரத்திலேயே, ஆர்டர் கேன்சலாகி விட்டது, இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ப்ரியா, உபர் ஈட்ஸ்-ன் சேவை என்ணை தொடர்பு கொண்டு தனது 76 ரூபாயை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர், 76 ரூபாயை தனியாக திரும்ப தர இயலாது. எனவே ரூ.5,000 செலுத்துங்கள். 5,076 ரூபாயாக திரும்பவும் உங்களது வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக தெரிவித்துளளார். இதனை நம்பி, ப்ரியாவும் ரூ.5 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் இருந்து செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இது தொடர்பாக மீண்டும் அந்த இணைய சேவை எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர்கள், பணம் கிரெடிட் ஆகவில்லை. மீண்டும் 5,000 ரூபாய் செலுத்துங்கள் என்று கூற, ப்ரியாவும் மீண்டும் பணத்தை செலுத்தியுள்ளார்.

பணம் வரவில்லை என மீண்டும், மீண்டும் அவர்கள் கூற, தனது வாங்கி கணக்கில் 8 முறை 5,000 ரூபாய் அனுப்பியுள்ளார். இப்படியே அனுப்பி அவர் 40 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். அதன் பின் அந்த சேவை எண்ணை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

அதன்பின் தான், அவருக்கு தெரிந்துள்ளது இந்த சேவை எண் பொய்யானது என்றும், தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்துள்ளார். இதனையடுத்து, ப்ரியா வடபழனி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

4 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

6 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

9 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

9 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

10 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

13 hours ago