தடுப்பூசி செலுத்த வரும் மக்களில் 10 பேருக்கு குழுக்கல் முறையில் தலா 2 சென்ட் நிலம் வழங்கப்படும் என பவனி வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த செப்.12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அந்த வகையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்று 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் அம்மாபேட்டை பகுதியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பல பரிசுகளை பவானி வட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி தடுப்பூசி செலுத்த வரும் மக்களில் 10 பேருக்கு குழுக்கல் முறையில் தலா 2 சென்ட் நிலம் வழங்கப்படும் என பவனி வட்டாட்சியர் அறிவித்துள்ளார். இந்த வீட்டு மனை பட்ட வீடுகளற்ற ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் 4 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இதனால் காலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…