மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் இதற்கு மத்தியில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டார்.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்திய குடியுரிமை சட்ட பற்றி முழுமையாக தெரியாமல் எதிர் கட்சியினர் பேசி வருகின்றனர். இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் குடியுரிமை கேட்டு பதிவு செய்யலாம். திமுக அரசியல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
விரைவில் இந்திய குடியுரிமை பெறதா நபர்களை தேடி பிடித்து அவர்களை அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இலங்கை பிரபாகரன் இறப்புக்கு பிறகு அங்கு எந்த பிரச்சனையும் இல்லை. இஸ்லாமியர் நாடுகளில் இஸ்லாமியர்கள் மட்டும்தான் உயர் பொறுப்புக்கு வர முடியும்காஷ்மீர் பிரச்சனை குறித்து எதிர் கட்சிகள் அங்கு போராட்டம் செய்தால் கைது நடவடிக்கை செய்யப்படும் என்று கூறினார்கள். ஆனால் டெல்லியில் கூட போராட்டம் செய்து இருக்கலாம் ஆனால் செய்ய வில்லை.அதே போல்தான் இந்த சட்டத்திற்கும் முடிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…