சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் தாக்கல் செய்த மனு ! விசாரணை தள்ளிவைப்பு

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.இன்று இந்த மனு மீதான விசாரணையில், வரும் 15-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025