முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் : பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்

முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என பெட்ரோலிய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இதனையடுத்து, நாளை முதல் பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என பெட்ரோலிய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025