3-ம் கட்ட பேச்சுவார்த்தை..மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு..!

திமுக-மதிமுக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
திமுகவுடன் 2-கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்க மதிமுகவுக்கு திமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
மதிமுகவிற்கு திமுக தரப்பில் இருந்து 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க விரும்புவதால் தொகுதி பங்கீடு இறுதியாவதில் தொடர்ந்து இழுபறி நடந்து வருகிறது. இதுவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 17 இடங்களை ஒதுக்கியுள்ளது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025