பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

Published by
மணிகண்டன்

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. – தமிழிசை பேட்டி.

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் மறந்து இருந்த பழைய நினைவுகளை புது திட்டங்கள் மூலம் அதனை செய்லபடுத்தி உள்ளார் பிரதமர் மோடி என பேசினார்.

அவர் கூறுகையில், நாம் அனைவரும் , ரயிலை விட விமானத்தில் சென்றால் தான் வேகமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியும் என நினைத்து இருந்தோம். அதனை தவிர்த்து ரயிலிலும் வேகமாக செல்ல முடியும் என வந்தே பாரத் ரயிலை கொண்டு வந்தார் பிரதமர் மோடி.

அடுத்து மக்கள் மறந்து இருந்த ரேடியோவை நினைவூட்ட மனதின் குரல் எனும் நிகழ்ச்சி கொண்டு வந்து அதன் மூலம் மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. மக்கள் மறந்து இருந்த தபால் நிலையத்திற்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் கொண்டு வந்து, அதன் மூலம் மீண்டும் மக்களை தபால் நிலையம் கொண்டு வந்தார் பிரதமர் மோடி என கூறி, இப்படி பிரதமர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் இருக்கிறது என்றும் இதனை விடுத்து எதிர்க்கட்சிகள், பிரதமர் பிரிவினைவாதம் பேசுவதாக பொய் குற்றம் சாட்டை முன்வைத்து வருகின்றனர் என தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் 100 நாளில் 25 நாட்கள் இளைஞர்களுக்ககால நான் முழுக்க உழைப்பேன் என பிரதமர் மோடி கூறுகிறார். 4 கட்ட தேர்தலில் ஏற்கனவே எங்களுக்கு (பாஜக) பெரும்பான்மை வந்துவிட்டது . இனி எல்லாம் போனஸ் தான் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

2 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

2 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

3 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

4 hours ago