ஆன்லைன் லோன் ஆப் மோசடி சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் சேவைகளில் கடன் பெறுவது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் பலர் கடன் வாங்கி பாதிப்புக்குள்ளாகி வருவதால் இதையடுத்து ஆர்பிஐ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அந்த வகையில், ஆன்லைன் லோன் ஆப் மோசடி குறித்து சென்னை காவல்துறை ஒரு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளது. அதில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன்களுமே ரிசர்வ் வங்கியால் NBFC ஆக பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த லோன் App-களின் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவைகள்.
இந்த அப்ளிகேஷன்கள் உபயோகிப்பவர்களின் கைபேசியின் எல்லா தனியுரிமையை மீறும் வகையில் அவை பயன்படுத்துகின்றன. தகவல்களையும் சேகரித்து, உபயோகிப்பவர்களின் பொதுமக்கள் கடன் அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதார் அல்லது வங்கி விவரங்களை மேற்படி பதிவு பெறாத, முறைப்படுத்தப்படாத அப்ளிகேஷன்களில் கொடுக்க வேண்டாம்.
உங்களின் அனைத்து தொலைபேசி தொடர்புகள். புகைப்படங்கள், கேமரா இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி நினைவகம் ஆகியவை இந்த பணக் கடன் வழங்குநர்களால் சமரசம் செய்யப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும் என கேட்டு கொண்டுள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…