தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு உடல்தகுதி தேர்வு கடந்த 06-ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கியது.இதில் விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வானவர்களுக்கான உடல்தகுதி தேர்வு விழுப்புரத்தில் உள்ள கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் நாள் உடல்தகுதி தேர்விற்காக விழுப்புரத்தில் உள்ள 900 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.அந்த இளைஞர்களுக்காக மார்பளவு ,உயரம் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது.
இந்நிலையில் ஒரு வாலிபருக்கு உயரம் அளவீடு செய்து கொண்டு இருந்தனர்.அப்போது அவரின் காலில் அதிகப்படியான மண் ஒட்டி இருந்தது.உடனே அவரின் குதிகாலை பார்த்தனர். அதில் உயரத்தை அதிகமாக காட்டுவதற்காக பேஸ்ட் தடவி அதன் மேல் காகித அட்டையை வைத்து இருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கெங்கராம்பாளையத்தை சார்ந்த வாலிபர் என்பது தெரியவந்து. அவரின் உயரம் 168 செ.மீ விட 3 செ.மீ குறைவாக இருப்பதால் உயரத்தை அதிகமாக காட்டுவதற்காக பேஸ்ட் தடவி அதன் மேல் காகித அட்டையை தெரியவந்து. பின்னர் அந்த இளைஞரை தகுதி நீக்கம் செய்து எஸ்.பி ஜெயக்குமார் மைதானத்தில் இருந்து அனுப்பினார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…