சினிமாவில் தீரன் அதிகாரனாக இருந்த கதாபாத்திரம் போல் உண்மை வாழ்க்கையில் தீரன் அதிகாரனாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி ஜாங்கிட் இன்று பணி நிறைவு பெற்றார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்தவர்க் எஸ்.ஆர்.ஜாங்கிட். கல்லூரி பேராசிரியரான இவர் சிவில் சர்விஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்று 1985 ம் ஆண்டு ஐபிஎஸ் ஆனார். முதல் பணியாக தமிழகத்தில் அம்பாசமுத்திரம் ஊரில் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியை தொடங்கினர். தொடந்து நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக திறம்பட செயல்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1996 ம் ஆண்டு காவல் கண்காணிப்பாளராக ஜாங்கிட் இருந்த போது ஏற்றப்பட்ட சாதிக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. அதே போல், வல்லநாடு பகுதியில் துப்பாக்கி சுடுதல் மையத்தை கொண்டு வந்ததும் இவர் தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாராக இருக்கும் போது முன்னாள் எம் எல் ஏ வீட்டில் கொள்ளை அடித்து அவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான பவாரிய கொள்ளையர்களை ராஜஸ்தான் மாநிலம் வரை சென்று கைது செய்து தண்டனை பெற்று தந்தார்.
பல்வேறு பணிகளை திறம்பட செயல்பட்டதற்க்காக தமிழக அரசின் முதலமைச்சர் விருதினை இரண்டு முறையும், மத்திய அரசின் குடியரசுத்தலைவர் விருது இரண்டு முறையும், பிரதமர் விருது ஒரு முறையும் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் குற்றத்தடுப்பு டிஐஜி உள்ளிட்ட பதவிகளில் இருந்த ஜாங்கிட் கும்பகோணம் அரசு போக்குவரத்து ஊழல் தடுப்பு அதிகாரியாக இருந்தார். இந்நிலையில், அவரது பணி காலம் இன்றுடன் நிறைவடைந்தது.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…