Minister K Ponmudi [File Image]
Ponmudi : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால், தனது அமைச்சர் பதவியை மட்டுமல்லாது திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் பொன்முடி.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பொன்முடி. உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் எம்எல்ஏவானார் பொன்முடி. அதனை தொடர்ந்து மீண்டும் பொன்முடி அமைச்சராக பொறுப்பேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழக ஆளுநரை கோரியிருந்தார். .
ஆனால், ஆளுநர் ரவி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டதன் பெயரில் மீண்டும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுனர் ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்வு இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இந்த முறையும் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை பொறுப்பு வழங்கப்படும்என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது உயர்கல்வித்துறை பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனித்து வருகிறார்.
இன்று மாலை திருச்சியில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் முதல் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால், பதவிஏற்பு விழாவை எளிமையாக விரைவாக நடத்த வேண்டும் என ஆளுநர் மாளிகையில் எளிதாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…