மாணவர்களின் புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள்..!

Published by
Sharmi

மாணவர்களின் புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலனை மேம்படுத்தும் வகையில் பாட புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த புத்தகப்பைகளில் முன்னாள் முதலமைச்சர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றிருப்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா.ரோஸ்நிர்மலா தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்க மட்டுமே உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புத்தக பைகள், குறிப்பேடுகள் போன்ற இதர உபகரணங்கள் வழங்க அனுமதி கிடையாது என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தகப்பை வழங்கப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும், வழங்கப்பட்ட புத்தகப்பைகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago