இன்றுடன் தபால் வாக்கு நிறைவு! நாளை பிரச்சாரம் ஓய்வு! இறுதி கட்டத்தில் மக்களவை தேர்தல்!

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: இன்றுடன் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவடைய உள்ள நிலையில், நாளை பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது.

நாட்டில் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக பிரதான அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பூத் சிலிப் விநியோகம், தபால் வாக்கு பெறும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு செலுத்தும் பனி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுபோன்று தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்த இன்றே கடைசி நாளாகும்.

அதேபோல் தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்வு பெறுகிறது. இதனால் இன்றும், நாளையும் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க காணப்படும். மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த பூத் சிலிப் வழங்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது.

விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் சிலிப் வழங்கவும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் Voter Helpline என்ற மொபைல் செயலியில் பூத் சிலிப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

6 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

7 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

7 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

9 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

9 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

10 hours ago