பிரியங்கா கொலை சம்பவம்..! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தான் செய்வோம்..!சீமான் அதிரடி ..!

Published by
murugan
  • பிரியங்கா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு குறித்து பேசிய சீமான் , நான் இந்த என்கவுண்டரை  வரவேற்கிறேன்
  • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தான் செய்வோம் பாலியல் குற்றத்திற்கு ஒரே தண்டனை இருக்கும்.

தெலுங்கானாவில் நேற்று பிரியங்கா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்த சம்பவம் இந்திய அளவில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த என்கவுண்டருக்கு பல திரைப்பட பிரபலங்கள்  , அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

அந்தவகையில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது , நான் இந்த என்கவுண்டரை வரவேற்கிறேன். மரணம் என்பது எந்த ஒரு குற்றத்துக்கு தீர்வாகாது என்று போராடுபவர் நாங்கள் ஆனால் பெண்களை இது போன்று  சீரழிக்கும் அவர்களுக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் சிறந்த தண்டனை இருக்க முடியாது.

பொள்ளாச்சியில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.அதில் குற்றவாளிகள் 90 நாட்களுக்கு ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிடுகின்றனர்.இதெல்லாம் மிகப்பெரிய கொடுமை .இது போன்று பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை மக்கள் முன் வைத்து சுட்டால் தான் ஒருவித பயம் வரும்.

இதுபோன்ற கொடூரர்களுக்கு சரியான தண்டனை இல்லை என்றால் குற்றம் குறையாது. மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது தான் செய்வோம் பாலியல் குற்றத்திற்கு ஒரே தண்டனை இருக்கும்.

ஆறு வயது குழந்தையை பாலியல் கொடுமை செய்கிறவனை  தண்டிக்காமல் சிறையில் அடைத்து கொண்டாடுவது அதைவிட கொடுமை வேறு எதுவும் இல்லை என கூறினார்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

7 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

8 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

8 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

9 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago