மாணவரணி உள்பட பலவற்றில் பதவி வகித்து தற்போது திமுக தலைவராகி உள்ளேன் என முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் முக் ஸ்டாலின், மெட்ரோ ரயில் சேவையை கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்கிறேன். மாணவனாக இருந்தபோது மாணவர்களை ஒன்று திரட்டி இந்திக்கு எதிராக வீதியில் எறங்கி போராடினேன். மாணவரணி உள்பட பலவற்றில் பதவி வகித்து தற்போது திமுக தலைவராகி உள்ளேன் என கூறியுள்ளார்.
கடந்த 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்ன நிலையில் உள்ளது என்பதைக் கூற எடப்பாடி பழனிசாமி தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 2016ல் அதிமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது செய்யாதது ஏன்? என்றும் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக கொடுப்பதா என விமர்ச்சித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…