திறக்கப்படாத திருமண மண்டபத்திற்கு சொத்துவரி! உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த ரஜினி!

Published by
லீனா

திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திருமண மண்டபம் ஆனது கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக திறக்கப்படவில்லை. ஆனால் பொதுமுடக்கம் காலத்தில் பயன்படுத்த முடியாமல் அடைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த சொத்து வரியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ரஜினியின் சட்ட ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் மனுவை தாக்கல் செய்த நிலையில், அந்த  மனுவில், ‘ ரஜினிகாந்த் தனது திருமண மண்டபத்திற்கு முறையாக சொத்து வரி செலுத்தி வருகிறார். கடைசியாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வரி செலுத்தியுள்ளார். கடந்த மார்ச் 24-ம் தேதி முதல், மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமல்படுத்திய நிலையில்,  அதன்பின் திருமணம் மண்டபம் காலியாக தான் உள்ளது. யாருக்கும் வாடகை விடவில்லை. முன்பதிவு செய்தவர்களின் பணமும் திரும்ப கொடுப்பட்டது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி, ஏப்ரல் – செப்டம்பர் மாதத்திற்கான சொத்து வாரியாக 6.50 லட்சத்தை கட்ட வேண்டும் என கடந்த செப்.10 தேதி இன்வாய்ஸ் அனுப்பியுள்ளது. எனவே காலியாக இருந்த திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என எனது மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து, கடந்த செப்.23-ம் தேதி எனது மனுதாரர், சென்னை மாநகராட்சிக்கு நோட்டிஸ் அனுப்பினார்.  ஆனால்,இதுவரை எந்த பதிலும் வரவில்லை.’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago