தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து அரசாணையை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை என தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.நிவர் புயல் காரணமாக நாளை 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,விழுப்புரம் ,கடலூர்,திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை (மயிலாடுதுறை சேர்த்து) ,திருவாரூர் ,வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று அறிவித்த நிலையில் தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தமிழக அரசு நாளை பொது விடுமுறை என்று அறிவித்துள்ளது.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…