இன்னும் 32 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகம் இருந்து வருகிறது. இதன் காரணமாக மழையின் அளவும் அதிகரித்து உள்ளது.மேலும் கியார் மற்றும் மகா என்று இரண்டு புயல்கள் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனையொட்டி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மகா மற்றும் கியார் புயல்களின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மகா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.மழையின் அளவை பொருத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.நீர்நிலைகளில் செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்னும் 32 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…