துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.அப்பொழுது அவர் பேசுகையில்,முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று கூறினார்.ரஜினி இவ்வாறு கூறியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள்,சந்திப்பில் பேசியது என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு அழகிரி பதில் அளிக்கையில்,ஸ்டாலின் உடனான சந்திப்பில் ரஜினியின் தர்பார் குறித்து பேசினோம்.உண்மையைத்தான் சொல்கிறேன்.தர்பார் படம் நன்றாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார்.தர்பார் படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா என்று என்னிடம் கேள்வி கேட்டார்.நான் பார்க்கவில்லை என்று கூறினேன்.
அப்பொழுது துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அழகிரி பதில் கூறுகையில், ரஜினி நல்லவர்.சினிமா என்றால் வசனம் எழுதி கொடுப்பார்கள் .ஆனால் இவர் துக்ளக் விழாவில் சொந்தமாக பேசிவிட்டார்.ரஜினி வாய்தவறி பேசிவிட்டார்.ரஜினி உள்நோக்கத்துடன் பேசியிருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…