துக்ளக் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.அப்பொழுது அவர் பேசுகையில்,முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று கூறினார்.ரஜினி இவ்வாறு கூறியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள்,சந்திப்பில் பேசியது என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு அழகிரி பதில் அளிக்கையில்,ஸ்டாலின் உடனான சந்திப்பில் ரஜினியின் தர்பார் குறித்து பேசினோம்.உண்மையைத்தான் சொல்கிறேன்.தர்பார் படம் நன்றாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார்.தர்பார் படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா என்று என்னிடம் கேள்வி கேட்டார்.நான் பார்க்கவில்லை என்று கூறினேன்.
அப்பொழுது துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அழகிரி பதில் கூறுகையில், ரஜினி நல்லவர்.சினிமா என்றால் வசனம் எழுதி கொடுப்பார்கள் .ஆனால் இவர் துக்ளக் விழாவில் சொந்தமாக பேசிவிட்டார்.ரஜினி வாய்தவறி பேசிவிட்டார்.ரஜினி உள்நோக்கத்துடன் பேசியிருக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…