நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அதில் மாணவர்கள், பெரியவர்கள் பலர் சென்னை பெசன்ட் நகரில் கோலம் மூலம் NO CAA, NO NRC என எதிர்ப்பை தெரிவித்தனர் அவர்களை கைது செய்து, விடுவித்தனர். அதை தொடர்ந்து திமுக தலைவர் வீட்டில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார். அதுபோல விசிக தலைவர் திருமாவளவன் கோலம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று பல்வேறு விதமாக மக்கள், அரசியவாதிகள் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் ஷஃபத்- ஷாஹின் மணமக்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. ஏராளமான உறவினர்களிடையே இந்து, கிறிஸ்துவ நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றனர். மணமக்களுக்கு அவரது நண்பர்கள் வழங்கிய அன்பளிப்பில், ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே என ஒருங்கிணைந்து சொல்லுவோம் No CAA, No NRC என்ற வாசகத்தை அச்சிட்டு அன்பளிப்பை வழங்கினர்.
மேலும் நம்மை யாராலும் பிரிக்க முடியாது. எனவே, நாம் ஒற்றுமையாக இருப்போம். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்றுமே இந்தியர்களே, ஒற்றுமையே நமது பலம் என நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…