ராமர் கோயில் விழா… சிறப்பு பூஜைகள் விவகாரம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 12.30மணியளவில் குழந்தை ராமர் சிலை திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலர் ராமர் கோவில் விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

தனியார் கோயில்களில் நேரலை – போலீசார் அனுமதி தேவையில்லை!

இந்த விழாவை நேரடியாக காண இந்தியாவில் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள், பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் , அன்னதானம் என பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் என பல்வேறு நிறுவனங்கள் அரை நாள் விடுமுறையை அறிவித்துள்ளன.

அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். ஆனால், சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழக அரசு இன்று கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுக்கிறது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்டது.

தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், தமிழகத்தில் அரசு இன்று ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என கூறியது. அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கில் எதிர்மனுதாரர் யார் என வழக்கு தொடர்ந்தவர்கள் குறிப்பிடவில்லை என்றும், யார் எந்த இடத்தில் அனுமதி மறுத்தார்கள் என்றும் விளக்கம் கேட்டு வழக்கு தொடர்ந்த பாஜக தரப்பிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே போல , தமிழக அரசு இந்த விவகாரம் குறித்து முழு விளக்கத்தை, அதாவது , எந்த இடத்தில் எதற்காக யார் சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுத்தார்கள், அதற்கான காரணம் என்ன என்பது பற்றிய விளக்கத்தை வரும் வெள்ளிக்கிழமைக்குள் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Recent Posts

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

7 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

9 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

12 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

12 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

13 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

15 hours ago