மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி – தமிழக அரசு ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

வேலை இழந்துள்ள மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலினை.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தகவல் கூறியுள்ளார். வேலை இழந்துள்ள மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலினை செய்து வருவதாக உச்சதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜேதீப் குப்தா தெரிவித்துள்ளார்.

மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அதை தொடர்ந்து அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்தது.

தற்போது தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது பிறகு, கடந்த 3 மாதங்களில் இந்த வழக்குகள் மூன்று முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை விரைவில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 minutes ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

31 minutes ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

1 hour ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

2 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

2 hours ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

2 hours ago