கொரோனாவால் உயிரிழந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததற்காக கீழ்பாக்கம் பகுதி மக்கள் 20 பேரின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பால் 55 வயது மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். இவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் சென்றனர்.
ஆனால், கீழ்பாக்கம் பகுதி மக்கள் மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் மருத்துவரின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து, மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாக கீழ்பாக்கம் பகுதி மக்கள் 20 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்கள் மீது, ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தது, கொலைமிரட்டல், ஊரடங்கு மீறல், சிறைபிடித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…