தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக 35 கடைகளை அகற்றம்!

Published by
லீனா

குமுளி மற்றும் கூடலூர் போலீசார் உதவியுடன் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் இயங்கும் 35 கடைகளை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

தமிழக-கேரள எல்லை இணைக்கும் தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை கேரளாவிற்கு செல்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக, இந்த தேசிய நெடுஞ்சாலை அருகே கம்பம் மேற்கு வனசரக எல்லையை ஒட்டிய பகுதி மற்றும் தேசிய நெடுஞ் சாலையை ஆக்கிரமித்து 35 கடைகள் இயங்கி வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில், பொது ஊரடங்கால் முடங்கிய போக்குவரத்தை பயன்படுத்தி, தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து, தமிழக குமரி வரையிலான ஆறு கிலோமீட்டர் பாதை அகலப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து, தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த கடைகளை அகற்ற 15 நாட்களுக்கு முன்னமே, தேசிய நெடுஞ்சாலை துறையினரால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும் அகற்றப்படாததால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இயங்கும் குமுளி மற்றும் கூடலூர் போலீசார் உதவியுடன் தமிழக குமுளி பேருந்து நிலையத்தில் இயங்கும் 35 கடைகளை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.

இதற்கு முன்னதாக கடைகளை இடிப்பதற்கு கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜேசிபி இயந்திரத்தின் முன் படுத்து இடிக்க விடாமல் தடுத்தனர். இதனை தொடர்ந்து, அவர்களை அப்புறப்படுத்திய பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கடைகள் இருந்த இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, இரு மாநில எல்லை இணைப்பு பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago