தமிழ்நாடு

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து அறிக்கை..! மருத்துவர்களிடம் அமலாக்கத்துறை ஆலோசனை..!

Published by
செந்தில்குமார்

செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதில் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மற்றம் செய்ய கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய மூத்த மருத்துவர் ஏஆர் ரகுமாம் குழு பரிந்துரைத்துள்ளது என்று கூறியிருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து இஎஸ்ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவர்கள் தரும் தகவல்களை பொறுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago