கொரோனா பாதிப்பில் இருக்கும் மக்களின் நலன் கருதி சிலிண்டர் விலையை ஏற்றாமல் இருக்க வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தல்.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக சாதாரண மக்களைப் பெருமளவு பாதிக்கும். தற்போதைய கொரோனா காலத்தில் வருமானம் போதுமான அளவில் கிடைக்காத சூழலில் அன்றாட வாழ்க்கைக்கே பொருளாதாரம் தேவையான அளவிற்கு இல்லை. அப்படி இருக்கும் போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சமாளிப்பது சற்று கடினம் என தெரிவித்தார்.
எனவே, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தைக் காரணம் காட்டி, மாதந்தோறும் விலை உயர்த்தினால் அது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக அமையும்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறவும், இனியும் விலையேற்றப்படாமல் நிலைத்த தன்மைக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…