தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.என்.ரவி அவர்களின் வாழ்க்கை பின்னணி.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தார். இவரது மனைவி லட்சுமி ரவி. இவர் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வாழ்க்கை பின்னணி குறித்து பார்ப்போம்.
இவர், 1976-ஆம் ஆண்டு கேரள மாநிலம் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு, உளவுத்துறை சிறப்பு இயக்குனராக இருந்து பணி ஓய்வு பெற்றார். 2014-ல் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்து குழுவிற்கும், இந்திய அரசுக்கும் இடையில் மத்தியஸ்தராக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இவரது முயற்சியின் பலனாக, போராட்டக் குழுவுக்கும் இந்திய அரசுக்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை 2015ல் கையெழுத்தானது.
அதன்பின் 2018ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நாகலாந்து மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது 2021 செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…